திருச்சி ஸ்ரீ ஜெயேந்திரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி பிளஸ்2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை

திருச்சி: திருச்சிராப்பள்ளி ஸ்ரீ ஜெயேந்திரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் நடந்து முடிந்த 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் R.ஜெயரிஷி 589 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவி T.ஜெயகிருத்திகா 583 மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தையும் மாணவர்கள் B.கிருஷ்ணசுவாமி மற்றும் J.ஜெயஹரிஷ் 580 மதிப்பெண்கள் பெற்று 3 வது இடத்தையும் பெற்றுள்ளனர். மொத்தம் 164 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் 163 மாணவ, மாணவிகள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணினி அறிவியல் பாடத்தில் 2 மாணவ, மாணவிகளும், கணினி பயன்பாடு பாடத்தில் 2 மாணவ, மாணவிகளும், கணித பாடத்தில் ஒரு மாணவனும், வேதியியல் பாடத்தில் ஒரு மாணவனும், பொருளாதார பாடத்தில் ஒரு மாணவியும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

19 மாணவ மாணவிகள் 550/600 மதிப்பெண்களுக்கு மேலும், 50 மாணவ மாணவிகள் 500/600 மதிப்பெண்களுக்கு மேலும், 108 மாணவ மாணவிகள் 450/600 மதிப்பெண்களுக்கு மேலும், 143 மாணவ, மாணவிகள் 400/600 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர். பள்ளியின் சராசரி மதிப்பெண் 439/600 ஆகும்.
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் தலைவர் B.S.சந்திரமௌலி, செயலர் முனைவர் கோ. மீனா, தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன், இயக்குனர் S.அபர்ணா, மூத்த முதல்வர் முனைவர் S.லட்சுமணன், முதல்வர் R. கீதா, துணை முதல்வர் S.உமா மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

The post திருச்சி ஸ்ரீ ஜெயேந்திரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி பிளஸ்2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை appeared first on Dinakaran.

Related Stories: