கடலூர், மே 10: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 7 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான வைத்தியநாதன் மகன் பிரபு (38) என்பவர் அந்த சிறுமியின் வீட்டுக்கு சென்று சிறுமிக்கு ஆபாச வீடியோவை காண்பித்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் பின்பு அவர் அங்கிருந்து சென்று விட்டார்.
மாலையில் சிறுமியின் பெற்றோர் வீட்டுக்கு வந்தபோது சிறுமி நடந்தது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது குறித்து நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பிரபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும் அவர் மீது கடலூர் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சாட்சிகள் விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதி லட்சுமி ரமேஷ் தீர்ப்பு கூறினார்.அவர் தனது தீர்ப்பில் பிரபு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பால ரேவதி ஆஜராகி வாதாடினார்.
The post ஆபாச வீடியோ காண்பித்து சிறுமி பாலியல் பலாத்காரம் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.