திரளான ஊர்மக்கள் பங்கேற்பு பனைமரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு

 

க.பரமத்தி, மே 7: கரூர் மாவட்டம் க.பமத்தி அடுத்த குளத்தூர்பட்டியை சேர்ந்த தங்கவேல் மகன் பிரகாஷ் (30). இவர் பவித்திரம் அடுத்த முத்துச்சோளிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள 50 அடி உயர பனைமரத்தில் நுங்கு வெட்டுவதற்காக நேற்று முன் தினம் ஏறினார். அப்போது மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பிரகாசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் பிரகாஷை மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனையில் பிரகாஷ், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post திரளான ஊர்மக்கள் பங்கேற்பு பனைமரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Related Stories: