குளித்தலையில் திடீரென தீ பிடித்து எரிந்த கார்

குளித்தலை மே 16: குளித்தலையில் திடீரென கார் தீ பிடித்து எரிந்தது. டிரைவரின் சாமர்த்தியத்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கரூர் மாவட்டம் சித்தளவாய் கீழ அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் திருப்பதி (48). இவருடன் உறவினர்கள் 4 பெண்கள் ஒரு ஆண் என 6 பேர் காரில் தொட்டியத்தில் உள்ள உறவினர் நிகழ்ச்சிக்கு சீர் சாமான்களை வாங்குவதற்காக சித்தள வாயிலிருந்து காரில் புறப்பட்டனர். அவர்கள் குளித்தலை வந்து பூமாலை துணிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கண்டு மீண்டும் தொட்டியம் செல்வதற்காக மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வழியாக சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது அம்மா உணவகம் அருகே வேகத்தடையில் ஏறி இறங்கியபோது திடீரென காரில் தீப்பிடித்ததுள்ளது. உடனே கார் ஓட்டுநர் திருப்பதி, சாலை ஓரம் காரை நிறுத்தியுள்ளார். காரில் இருந்த 6 பேரும் காரைவிட்டு இறங்கி வெளியில் வந்தனர்.

இந்நிலையில் காரில் இருந்து தீ வேகமாக பரவி கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் மருத்துவமனை காவலாளி உதவியுடன் கட்டிடத்திற்காக போடப்பட்டிருந்த ஆழ்குழாய் பைப்பில் ரப்பர் டியூப் மூலம் பிச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் காரில் மற்ற பாகங்கள் முற்றிலுமாக எரிந்த விட்டது. தகவலறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஓட்டுநரில் சாதுர்யமாக காரை நிறுத்தியதால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. மேலும் கார் தீ பிடித்த இடத்தில் இருந்து நூறு மீட்டர் அருகில் பெட்ரோல் பங்க் இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post குளித்தலையில் திடீரென தீ பிடித்து எரிந்த கார் appeared first on Dinakaran.

Related Stories: