பிற்பகலில் அரசு சிறப்பு வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜராகி, மதுரை எஸ்பிக்கு சகாயம் எழுதிய கடிதத்தை தாக்கல் செய்தார். மேலும் வீடியோ கான்பரன்சில் ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட சம்மனை அவர் பெறவில்லை. வழக்கில் சாட்சியம் அளிக்க அவருக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என ஏற்கனவே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து நீதிபதி, ‘‘நான் வரும் செப். 18 முதல் மருத்துவ விடுப்பில் செல்கிறேன். எனவே, சகாயம் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சில் ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம். இதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ெசன்னை முதன்மை மாவட்ட நீதிபதிக்கு கடிதம் அனுப்ப வேண்டும். சகாயத்திற்கு தேவையான பாதுகாப்பு தொடர்பாக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, வீடியோ கான்பரன்சில் ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு சகாயத்திற்கு புதிதாக சம்மன் அனுப்ப வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 6க்கு தள்ளி வைத்தார்.
The post கிரானைட் முறைகேடு வழக்கில் ஆஜராகவில்லை வீடியோ கான்பரன்ஸ் மூலம் சகாயம் சாட்சியம் அளிக்கலாம்: மீண்டும் சம்மன் அனுப்ப மதுரை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.