பசலைக்கீரை சூப்

தேவையானவை

பசலைக் கீரை (பொடியாக நறுக்கியது) -1 கிண்ணம்
பயத்தம் பருப்பு – 50 கிராம்
தண்ணீர் – 500 மி.லி.
தக்காளிப் பழம் (பொடியாக நறுக்கியது) -2
மல்லிப் பொடி – 1 தேக்கரண்டி
சீரகப் பொடி – அரை தேக்கரண்டி
வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பூண்டு – 2 பற்கள்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) -1
எலுமிச்சம் பழச்சாறு – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
மிளகுத்தூள் – தேவைக்கேற்ப.

செய்முறை:

கீரையை சுத்தம் செய்து, வேக வைத்த பருப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய கீரையைச் சேர்த்து வேகவிடவும்., பின்னர், வாணலியில் வெண்ணெயை உருக்கி, வெங்காயத்தையும் பூண்டையும் அதில் வதக்கவும். அத்துடன் சீரகப்பொடி, மல்லிப் பொடி, பொடியாக நறுக்கிய தக்காளிப் பழம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பின்னர் வேக வைத்துள்ள பருப்பு கீரையை தண்ணீரை சேர்த்து, அதனுடன் தேவையான உப்பு சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் விடவும். பின்னர் இறக்கி வைத்துவிட்டு மிளகுத்தூள், எலுமிச்சைப் பழச்சாற்றைச் சேர்க்கவும். பசலைக் கீரை சூப் தயார்.

 

The post பசலைக்கீரை சூப் appeared first on Dinakaran.