துத்திக்கீரை கூட்டு

தேவையானவை:

துத்திக்கீரை – 2 கப்,
காய்ந்த மிளகாய் – 2,
சாம்பார் பொடி – 1 ஸ்பூன்,
புளி – ஒரு கோலி குண்டு,
பெரிய தக்காளி – 1,
உப்பு – திட்டமாக,
சின்ன வெங்காயம் – 10,
வெந்த பருப்பு – ¼ கப்.

தாளிக்க:

கடுகு – ½ ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 ஸ்பூன்,
பெருங்காய பொடி – ¼ ஸ்பூன்,
துருவிய தேங்காய் – 4 ஸ்பூன்,
எண்ணெய் – 2 ஸ்பூன்.

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், பொடியாக அரிந்த துத்திக்கீரை, தக்காளி சேர்த்து வதக்கி நீரூற்றி வேக விடவும். நன்கு வெந்ததும் சாம்பார் பொடி, புளி சேர்த்து கொதிக்க விட்டு தேங்காய் அரைத்து, பருப்புடன் சேர்த்து 1 கொதி விட்டு இறக்கவும். மிளகு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் தாளித்து போடவும். சுகருக்கு நல்லது.

 

 

The post துத்திக்கீரை கூட்டு appeared first on Dinakaran.