இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்த கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து உள்வாங்கியது. சிறிது நேரத்தில் பக்கவாட்டில் இருந்த மண் சரிந்து ராட்சத பள்ளம் ஏற்பட்டது. தகவலறிந்த ஊராட்சி மன்ற நிர்வாகம் பொக்லைன் இயந்திரம் கொண்டு மண்ணை கொட்டி கிணற்றை மூடியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கிணற்றுக்கு கான்கிரீட் சுவர் கட்டி 3 வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் இடிந்துள்ளது.
தரமற்ற முறையில் பணி நடைபெற்றதால் தான் கிணறு இடிந்து விழுந்துள்ளது. இதை சீரமைக்காமல், பல ஆண்டாக பயன்படுத்தி வந்த கிணற்றை, ஊராட்சி நிர்வாகம் மண்ணை கொட்டி மூடியுள்ளது. இவ்வாறு செய்தால் பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக என்ன செய்வார்கள். எனவே, முறையாக தூர்வாரி, தரமான பக்கவாட்டு சுவர் கட்டி, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கிணற்றை கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
The post பக்கவாட்டு சுவர் இடிந்து உள்வாங்கிய பொது கிணறு: மண்ணை கொட்டி மூடிய ஊராட்சி நிர்வாகம் appeared first on Dinakaran.