அனைத்து இந்திய மொழிகளுக்கும் தாய் சமஸ்கிருதம்: அமித்ஷா சொல்கிறார்

புதுடெல்லி: ‘சமஸ்கிருதம் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளுக்கும் தாய்’ என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி உள்ளார். டெல்லியில் 1008 இடங்களில் இலவச சமஸ்கிருத வகுப்புகள் நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசுகையில், ‘‘சமஸ்கிருதம் எந்த மொழிக்கும் எதிரானது கிடையாது. யாரையும் அவர்களின் தாய்மொழியிலிருந்து விலக்கி வைக்க முடியாது.

சமஸ்கிருதம் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளின் தாய். எனவே, சமஸ்கிருதத்தை மேம்படுத்துவது அதன் மறுமலர்ச்சி சம்மந்தப்பட்டது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் விரைவுபடுத்துவதாகும். சமஸ்கிருதம் உலகின் மிகவும் அறிவியல் பூர்வமான மொழி மட்டுமல்ல, இணையற்ற இலக்கண அமைப்பையும் கொண்டது. பிரதமர் மோடியின் ஆட்சியில், சமஸ்கிருதத்தின் மறுமலர்ச்சிக்கு நாடு முழுவதும் சாதகமான சூழல் உருவாகி உள்ளது’’ என்றார்.

 

The post அனைத்து இந்திய மொழிகளுக்கும் தாய் சமஸ்கிருதம்: அமித்ஷா சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: