ஏரியில் மூழ்கி சிறுவன், சிறுமி உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் உள்ள ஏரியில் நேற்று திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.எடையார் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் மனைவி குப்பு (50) என்பவர் வாத்துகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அவருடன் வந்த திருக்கோவிலூர் அருகே வடக்கு நெமிலி கிராமத்தைச் சேர்ந்த அவரது தம்பி ராஜேந்திரன் மகள் ஜெயலட்சுமி (11) மற்றும் டி.எடையார் கிராமத்தை சேர்ந்த விஜி மகன் ருத்தீஸ்வரன் (4) ஆகியோர் ஏரியில் குளித்துள்ளனர்.

திடீரென இருவரும் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து குப்பு சத்தம் போட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post ஏரியில் மூழ்கி சிறுவன், சிறுமி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: