இந்நிலையில், சுமார் ஒரு மாதத்துக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பதால், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள், சத்துணவு சமையல் அறை போன்றவற்றை தூய்மைப்படுத்தி தயார் நிலையில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2 நாட்களாக தூய்மைப்பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்த பிறகே பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் தூய்மைப் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
The post கோடை விடுமுறை முடிந்து 2ம் தேதி திறப்பு பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.