கடந்த 12 ஆண்டுகளை விட 2024ல் கொலை வழக்குகள் குறைந்துள்ளன. 2012ல் மாதத்துக்கு சராசரியாக 161 வழக்குகள் பதிவு, 2021ல் மாதம் 130ஆக குறைந்தன. 2025 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 120 ஆக கொலை குற்றங்கள் குறைந்துள்ளன. காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடந்த 6 ஆண்டில் மிகக் குறைந்த வழக்குகள் 2024ல் பதிவாகின. நடப்பாண்டில் 1,325 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடி மற்றும் பழிவாங்கும் கொலைகளைக் கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகள் பெற்றுத் தரப்படுகின்றன.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நடப்பாண்டில் 1,325 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது : தமிழக காவல்துறை டிஜிபி தகவல் appeared first on Dinakaran.