அப்போது வலங்கைமான் அடுத்த நார்த்தாங்குடி என்ற இடத்தில் லாரி வந்த போது லாரியில் கட்டப்பட்டு இருந்த கயிறு அறுந்ததால் குடிநீர் குழாய்கள் திடீரென சரிந்தது. அந்த குழாய்களில் ஒன்று எதிரே வந்த சத்தியசீலன் கார் மீது விழுந்தது. இதில் கார் மேல் பகுதி சேதமான நிலையில் காருக்குள்ளே இருந்த சத்தியசீலன் படுகாயமடைந்தார். குடிநீர் குழாய்கள் சரிந்து விழுந்ததை பார்த்த டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் ஒரு குழாய், லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்து லாரிக்கு வெளியே நீட்டிக்கொண்டு இருந்தது.
இதில் சிரஞ்சீவிகுமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வலங்கைமான் போலீசார், காருக்குள் இருந்த சத்தியசீலனை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் லாரி மற்றும் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post லாரியில் ஏற்றி சென்றபோது கயிறு அறுந்ததால் ராட்சத குடிநீர் குழாய் சரிந்து நொறுங்கிய கார்: வாலிபர் படுகாயம், டிரைவர் தப்பினார் appeared first on Dinakaran.