அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தின் மூலம் 1974 ஆம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமானார். 1979ம் ஆண்டு கன்னி பருவத்திலே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து, அந்த ஏழு நாட்கள், சிட்டிசன், ரமணா, விருமாண்டி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். வானமே எல்லை, சின்ன ஜமீன், பொன்னுமணி, ஜெய்ஹிந்த், மகாநதி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 15க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்த இவர், கடந்த ஆண்டு மேரி கிறிஸ்மஸ் என்ற படத்தில் கடைசியாக நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். கமல்ஹாசனின் சத்யா, விக்ரமன் இயக்கிய பெரும்புள்ளி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக இருந்துள்ளார் ராஜேஷ். நடிப்பு மட்டுமல்லாது நில வணிகம், கட்டுமான தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். டும் டும் டும், ராம், உள்ளம் கேட்குமே உள்ளிட்ட பல படங்களுக்கு டப்பிங் கலைஞராக பணியாற்றியுள்ளார். எழுத்தாளர் அவதாரமெடுத்து 9 புத்தகங்களை எழுதியுள்ளார். நடிகர் ராஜேஷ் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
The post தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் சென்னையில் காலமானார் : திரையுலகினர் இரங்கல்!! appeared first on Dinakaran.