லாரி அதிபர் வீட்டில் 19 பவுன் நகை கொள்ளை

கண்டமங்கலம், ஏப். 29: கண்டமங்கலம் அருகே உள்ள ஆழியூர் மேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (42). இவரது மனைவி ஜோதிமணி. சுகுமார் கண்டெய்னர் லாரி வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுகுமார், ஜோதிமணி மற்றும் அவரது குடும்பத்தினர் சாப்பிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நேற்று அதிகாலை 5 மணியளவில் ஜோதிமணி எழுந்து பார்த்தபோது, ஜோதிமணியின் கழுத்தில் அணியிருந்த 7 பவுன் தாலி சரடு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே ஜோதிமணி, சுகுமாரிடம் கேட்டபோது, அலமாரியில் உள்ளதா என்று பார்க்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து ஜோதிமணி, வீட்டில் உள்ள அறையில் சென்று பார்த்துபோது, அலமாரியில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. அப்போது அலமாரியில் வைத்திருந்த 12 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.

தொடர்ந்து சுகுமார் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து நகையை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சுகுமார் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் பார்வையிட்டு, கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்த தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

The post லாரி அதிபர் வீட்டில் 19 பவுன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: