இந்நிலையில் நேற்றிரவு மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை சமயபுரம் அடுத்துள்ள வெல்ஸ்புரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, உணவுக்காக அங்கிருந்த மாமரத்தை தும்பிக்கையால் உலுக்கியது. கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனவிலங்குகள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அருகில் உள்ள கிராமத்திற்குள் நுழைந்து வருகின்றன.
இந்த நிலையில் உணவுக்காக மாமரத்தை உலுக்கிய பாகுபலி யானையின் வீடியோவை அப்பகுதி பொதுமக்கள் தங்களது செல்போனில் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் யானையை மீண்டும் மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
The post மேட்டுப்பாளையம் அருகே உணவுக்காக மாமரத்தை உலுக்கிய பாகுபலி யானை: வீடியோ வைரல் appeared first on Dinakaran.