*தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்!!
*மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறை தண்டனை அளிக்க சட்டத்திருத்தம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்த மசோதா நிறைவேறியது. மருத்துவக் கழிவுகளை கொட்டினால், விதிகளை மீறியதாக தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
*கலைஞர் பல்கலைக்கழக சட்ட மசோதா-2025 சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக சட்ட முன்வடிவு நிறைவேற்றம் செய்யப்பட்டது. கலைஞர் பல்கலைக்கழகத்தால் தஞ்சை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவர்.
*தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
*தமிழ்நாடு உடற்கல்வியியல் விளையாட்டு பல்கலைக்கழக சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
*மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்க கொண்டு வரப்பட்ட மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.
*ஊராட்சிகளில் விளம்பரங்களை காட்சிப்படுத்தும் முறை தொடர்பான மசோதாவும் நிறைவேறியது. ஊராட்சிகளில் ஆட்சேபனைக்குரிய விளம்பரங்களை அகற்றும் முறை தொடர்பான மசோதாவும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
The post கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை, மருத்துவக் கழிவுகளை கொட்டினால் சிறை : பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்!! appeared first on Dinakaran.