துரைப்பாக்கத்தில் வீடு புகுந்து 19 பவுன் நகைகள் கொள்ளை: 5 பெண்கள் கைது

துரைப்பாக்கம்: சென்னை துரைப்பாக்கம், பல்லவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் டில்லிபாபு (33). சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 9ம் தேதி காலையில் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 19 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கண்ணகி நகர் காவல் நிலையத்தில் டில்லிபாபு புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர. இதில், கண்ணகிநகரை சேர்ந்த சுமதி (23), கலைவாணி (19), மீனா (30), கஸ்தூரி (23), ரம்யா (21) ஆகிய 5 பெண்கள்தான் வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்தது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 19 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

The post துரைப்பாக்கத்தில் வீடு புகுந்து 19 பவுன் நகைகள் கொள்ளை: 5 பெண்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: