இதுகுறித்து கண்ணகி நகர் காவல் நிலையத்தில் டில்லிபாபு புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர. இதில், கண்ணகிநகரை சேர்ந்த சுமதி (23), கலைவாணி (19), மீனா (30), கஸ்தூரி (23), ரம்யா (21) ஆகிய 5 பெண்கள்தான் வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்தது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 19 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
The post துரைப்பாக்கத்தில் வீடு புகுந்து 19 பவுன் நகைகள் கொள்ளை: 5 பெண்கள் கைது appeared first on Dinakaran.