கரூர், ஏப். 22: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு வார இடைவெளிக்கு பிறகு நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் வழக்கத்தைவிட அதிகளவு மக்கள் மனு கொடுக்க வந்ததால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்புடன் காணப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நாட்களில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருவது வழக்கம். இந்த நாளில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் வந்து மனு அளித்து சென்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக சுட்டெரிக்கும் கோடை வெயில் வாட்டி வதக்கி வந்தது.
இதன் காரணமாக கடந்த கடந்த சில வாரங்களாக நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டங்களில் கூட்டம் வழக்கத்தைவிட மிகவும் குறைவாகவே வந்தது. கடந்த ஏப்ரல் 14ம்தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை என்பதால் கடந்த வாரம் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், இரண்டு வார இடைவெளிக்கு பிறகு நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக வழக்கத்தை விட அதிகளவு மக்கள் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்து சென்றதால் கலெக்டர் அலுவலக வளாகம் மிகவும் பரபரப்புடனேயே காணப்பட்டது.
The post இரண்டு வார இடைவெளிக்கு பிறகு மக்கள் குறைதீர் நாள் கூட்டம் appeared first on Dinakaran.