சென்னை, ஏப்.10: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு முகாமில் போலீஸ் கமிஷனர் அருண் கலந்துகொண்டு பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுக்கள் பெற்றார். சென்னை பெருநகர காவல்துறையில் ஒவ்வொரு வாரம் புதன்கிழமை அன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடக்கும் பொதுமக்கள் குறைதீர்வு முகாமில், போலீஸ் கமிஷனர் அருண் கலந்துகொண்டு நேரடியாக புகார் மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன்படி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறை தீர்வு முகாமில் போலீஸ் கமிஷனர் அருண் கலந்துகொண்டு முதியவர்கள் உள்பட பொதுமக்களிடம் நேரடியாக 26 புகார் மனுக்கள் பெற்றார். அப்போது புகாரின் தன்மைக்கு ஏற்றப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கமிஷனர் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை காவல்துறை தலைமையிட கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி உடனிருந்தார்.
The post குறைதீர்வு முகாம் கமிஷனர் அருணிடம் பொதுமக்கள் மனு appeared first on Dinakaran.