வட மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ஹெராயின் கடத்தி விற்ற அசாம் வாலிபர் கைது

 

ஆலந்தூர், ஏப்.9: வடமாநிலங்களில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டு, சென்னையில் விற்பனை செய்யப்படுவதாக பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் எஸ்ஐ அகஸ்டின் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது ஒரகடம் பகுதியில் தங்கியிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த நிஜாமுதீன் (24) என்பவர், ஹெராயின் கடத்தி வந்து சென்னையில் விற்றது தெரிந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 13 கிராம் ஹெராயின் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வட மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ஹெராயின் கடத்தி விற்ற அசாம் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: