நாகப்பட்டினம் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் களப்பணி

கீழ்வேளூர், ஏப். 4: நாகப்பட்டினம் நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் களப்பணி மேற்கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வேளாண் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்கள் கிராம அனுபணித்திட்டத்தின் ஒரு பகுதியாக திருக்குவளையில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்திற்குச் சென்றனர். அங்குள்ள நுகர் பொருள் சேமிப்பு கிடங்கினை பார்வையிட்டு அங்கே தானியங்களை சேமிக்கும் முறையையும் அதன் தரத்தை கண்டறியும் முறையையும் மேலும் அது மக்களை எவ்வாறு சேர்ந்து அடைகிறது என்பதை பற்றிய முறையையும் அறிந்து கொண்டனர்.

The post நாகப்பட்டினம் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் களப்பணி appeared first on Dinakaran.

Related Stories: