குளித்தலையில் காவலர்களுக்கு நீர்மோர், எலும்பிச்சைச்சாறு

 

குளித்தலை, மார்ச் 29: குளித்தலையில் கோடைகாலத்தை முன்னிட்டு காவலர்களுக்கு நீர்மோர் எலுமிச்சை சாறு டி.எஸ்.பி செந்தில்குமார் வழங்கினார். கோடை காலம் துவங்கியதை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி பகுதியில் பணிபுரியும் காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை போலீசாருக்கு நீர்மோர் எலுமிச்சை சாறு வழங்கும் நிகழ்ச்சி சுங்க கேட்டில் நடைபெற்றது. கோடை காலம் துவங்கியதை முன்னிட்டு கடும் வெயிலிலும் போக்குவரத்து துறையினர் காவல் தறையினர் பணியாற்றி வருகின்றனர் .

இந்நிலையில் அவர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் குளித்தலை போக்குவரத்து காவலர்களுக்கு காற்றோட்டம் உள்ள தொப்பி கருப்பு கண்ணாடி, நீர்மோர், எலுமிச்சை பழச்சாறு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் கலந்துகொண்டு போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பி, கண்ணாடி, பழச்சாறு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காவல்துறை ஆய்வாளர் உதயகுமார் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் அசோகன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

The post குளித்தலையில் காவலர்களுக்கு நீர்மோர், எலும்பிச்சைச்சாறு appeared first on Dinakaran.

Related Stories: