பூங்காவில் பூத்துக்குலுங்கும் அரிய வகை பச்சை நிற ரோஜா மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு

 

ஊட்டி, மார்ச் 26: ஊட்டி ரோஜா பூங்காவில் அரிய வகைய ரோஜா மலரான பச்சை ரோஜா பூத்துள்ளதால், சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசித்து செல்கின்றனர். ஊட்டி ரோஜா பூங்காவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா வகைகளும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகளும் உள்ளன. வனப்பகுதிகளில் காணப்படும் ரோஜா செடிகள் மற்றும் நாட்டு வகை ரோஜா மலர் செடிகளும் நடவு செய்யப்பட்டுள்ளன.

கோடை சீசனின் போது, இந்த ரோஜா செடிகள் அனைத்தும் கவாத்து செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக்குலுங்கும்.  பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். அதேபோல், கோடை சீசன் போது ரோஜா கண்காட்சியும் நடத்தப்படுகிறது. தற்போது கோடை சீசனுக்கான பூங்காவில் உள்ள அனைத்து ரோஜா செடிகளும் கவாத்து செய்யப்பட்டள்ளது. இதனால், பூங்காவில் உள்ள முதல் பாத்தி, இரண்டாம் பாத்திகளில் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது.

மலர்கள் இல்லாத நிலையில், ரோஜா பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். அதே சமயம், ரோஜா பூங்கா நுழைவு வாயில் பகுதியில் தற்போது அரிய வகை ரோஜா மலரான பச்சை நிற ரோஜா பூக்கள் அதிகளவு பூத்துள்ளன. இந்த அரிய வகை ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வதுடன், அதனை புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.

The post பூங்காவில் பூத்துக்குலுங்கும் அரிய வகை பச்சை நிற ரோஜா மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு appeared first on Dinakaran.

Related Stories: