புள்ளம்பாடியில் தண்ணீர் தின விழிப்புணர்வு

 

லால்குடி, மார்ச் 25: புள்ளம்பாடி தனியார் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் நடந்த தண்ணீர் தினவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாணவிகள் கலந்து கொண்டு செயல்விளக்கம் அளித்தனர்.

இந்நிகழ்வில் பெரும் செலவில்லா முறையில் தண்ணீரை சேமிக்கும் திட்டம் பற்றிய செயல்முறையை வேளாண் மாணவிகள் பள்ளி மாணவ, மாணவிகளிடம் எடுத்துரைத்தனர். மேலும் திறன் சார்ந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர். இதில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post புள்ளம்பாடியில் தண்ணீர் தின விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: