சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் இருந்த 14 மீனவர்களையும் மன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது 14 பேரும் தலா ரூ.4 லட்சம் செலுத்தினால் விடுதலை செய்யப்படுவதாக இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளது. மீனவர்கள் அபராதத்தை செலுத்தத் தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு தொடர்ச்சியாக தமிழக மீனவர்களுக்கு பல லட்சம் அபராதம் விதிப்பது தொடர் கதையாகி வருகிறது. இதனால் மீனவர்கள் அபராத தொகையை செலுத்த முடியாமல் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர். இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவதால் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து அபராத தொகையை செலுத்தி மீனவர்களை மீட்க வேண்டும் என்பதே பாம்பன் மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.
The post பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ.4 லட்சம் அபராதம்.. செலுத்த தவறினால் 6 மாதம் சிறை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு!! appeared first on Dinakaran.