டூவீலர் மீது லாரி மோதி வியாபாரி பலி

சங்ககிரி, மார்ச் 15: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பெரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் அம்சராஜ்(30). திண்டுக்கல் பகுதியில் தள்ளுவண்டியில் சிப்ஸ் கடை நடத்தி வரும் இவர், சொந்த ஊரான பெரும்பாலைக்கு சென்றார். பின்னர், நேற்று காலை மனைவி சரண்யா(23), மகன் தனுஷ்(2) ஆகியோருடன் டூவீலரில் திண்டுக்கல் திரும்பிக் கொண்டிருந்தார். சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சாலையை கடக்க முயன்றபோது பவானி பக்கமிருந்து சேலம் நோக்கி சென்ற லாரி மோதியது. இதில், மூவரும் தூக்கி வீசப்பட்டனர். அம்சராஜ் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தார். சரண்யா, குழந்தை தனுஷ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். சம்பவம் அறிந்து வந்த சங்ககிரி போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிரிழந்த அம்சராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

The post டூவீலர் மீது லாரி மோதி வியாபாரி பலி appeared first on Dinakaran.

Related Stories: