சிந்தாமணிப்பட்டியில் குட்கா பொருட்கள் விற்பனை

 

கரூர், மார்ச் 12: கரூர் மாவட்டம் சிந்தாமணிபட்டி அருகே குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற ஒருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம், வீரணம்பட்டியில் ஒரு கடையில் குட்கா பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக குளித்தலை போலீசார்களுக்கு அப்பகுதியினர் தகவல் அளித்தனர்.

தகவலறிந்து வந்த சிந்தாமணிபட்டி போலீசார் புகார் எழுந்த கடையில் சோதனை மேற்கொண்டதில், 100 கிராம் எடையுள்ள குட்கா பொருட்கள் பதுக்கி வைத்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த கடையில் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, விற்பனை செய்ய முயன்றவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சிந்தாமணிப்பட்டியில் குட்கா பொருட்கள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: