திருச்சி, மார்ச் 6: தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சார்ந்தவா்களுக்கு, மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சார்ந்தவா்களுக்கு, ‘பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தை சார்ந்தவா்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
இப்பயிற்சிக்கு பி.எஸ்.சி, எம்.எஸ்.சி நர்சிங் பட்டப் படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி நா்சிங், மற்றும் பொது செவிலியா் மருத்துவப் படிப்பு ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சியில் பங்கு பெற 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ₹.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்காக கால அளவு இரண்டு மாதமும் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் அளிக்கப்படும். இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபா்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல்நாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சோ்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, ராஜாகாலனி, மாவட்ட கலெக்டர் அலுவலகச் சாலை, திருச்சி-1 (0431-2463969) என்ற முகவாியில் தொடா்பு கொள்ளலாம் என்ற தகவலை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
The post ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி appeared first on Dinakaran.