சேலம், மார்ச் 4: சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள், நேற்று காலை, அலுவலகம் முன்பு திரண்டு, தங்களிடம் அத்துமீறி நடந்து கொள்ளும் முன்னாள் கவுன்சிலரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, தங்களிடம் இருந்து பணம் பறிக்கும் செயலில் அந்த முன்னாள் கவுன்சிலர் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினர். இப்போராட்டத்தை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அனைவரும் கலைந்து, பணிக்கு திரும்பினர். இச்சம்பவம் மண்டல அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post ஜி கவுன்சிலரை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.