சேலம், மார்ச் 4: சேலம் ஜாகிர் சின்னம்மாபாளையம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (42), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம், தனது நண்பரான சக்திவேலிடம், சூரமங்கலம் புதுரோடு பகுதியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, சக்திவேல், மாயக்கண்ணன் என்பவரின் மனைவியுடன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையறிந்த மாயக்கண்ணனின் நண்பர்கள் சிகா, சந்தோஷ், அலெக்சாண்டர் ஆகியோர் சேர்ந்து, ரவி மற்றும் சக்திவேலிடம் கேள்வி கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆத்திரத்தில் கத்தியை கொண்டு வெட்டி உள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த ரவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து ரவி சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிகா, சந்தோஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post தொழிலாளியை கத்தியால் வெட்டிய 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.