சென்னை மெரினாவில் காவல்துறையினரிடம் ரகளை செய்தவர் ஜாமின் கோரி மனு!!

சென்னை: சென்னை மெரினாவில் போதையில் காவல்துறையினரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திரமோகன் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். போதையில் சந்திரமோகன், தனலட்சுமி ஜோடி காவலர்களை ஆபாசமாக திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. ரகளை செய்த சந்திரமோகன், தனலட்சுமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தில் போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நேற்று தனலட்சுமி ஜாமின் மனு தாக்கல் செய்த நிலையில், இன்று சந்திரமோகன் ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். சந்திரமோகன் ஜாமின் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post சென்னை மெரினாவில் காவல்துறையினரிடம் ரகளை செய்தவர் ஜாமின் கோரி மனு!! appeared first on Dinakaran.

Related Stories: