இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக கட்சி நிர்வாகியாக இருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோகுல்நாத் (29) என்பவரும், இவரது நண்பர்கள் நவீன், மோகன் ஆகியோர், புவனேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் பிரபாகரன், பிரகாஷ், ஆகியோரிடம், ”எங்களிடம் அனுமதி பெறாமல் எப்படி விஜய் கட்சி பேனர் வைத்தீர்கள்” என கேட்டு தகராறு செய்துள்ளனர்.
இதனால் இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் உருட்டுக்கட்டை மற்றும் கைகளால் சரமாரி தாக்கிக்கொண்டனர். இதில், புவனேஷ்குமார் படுகாயமடைந்தார். அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுபோல் கோகுல்நாத்தின் வலது கையில் காயம் ஏற்பட்டு அதே மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். இரு தரப்பினரும் காசிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post விஜய் கட்சியினர் மோதல் appeared first on Dinakaran.