ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரிய வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குடன் திமுகவை இணைத்து எக்ஸ் வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டார். ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திமுகவை ஜாபர் சாதிக்குடன் தொடர்புபடுத்தி பதிவிட எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்கவும் திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எக்ஸ் வலைதள பக்கத்தில் உள்ள பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்திய நிலையில் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரிய வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: