அரசு அனுமதியின்றி மணல் எடுத்த 5 மாட்டு வண்டிகள் பறிமுதல் 3 பேர் கைது

திருக்காட்டுப்பள்ளி, அக். 24: பூதலூர் அருகே அரசு அனுமதியின்றி மணல் எடுத்த 5 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தன். பூதலூர் அருகே இந்தலூர் வெண்ணாற்றங்கரை பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் எடுப்பதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் பூதலூர் சப் இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கண்டனர். அப்போது இந்தலூர் நடுத்தெருவை சேர்ந்த நந்தகுமார் (19), காலனி தெருவை சேர்ந்த பழனிச்சாமி (40), மேலத்தெருவை சேர்ந்த வடிவேல் (44) மற்றும் இரண்டு பேர் என 5 பேர் மாட்டு வண்டிகளில் அரசு அனுமதியின்றி மணல் ஏற்றி கொண்டிருந்தது தெரிய வந்தது. நந்தகுமார், பழனிச்சாமி, வடிவேல் ஆகியோர் சிக்கினர். இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர். உடனடியாக 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்து ஸ்டேஷன் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

The post அரசு அனுமதியின்றி மணல் எடுத்த 5 மாட்டு வண்டிகள் பறிமுதல் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: