பெரம்பலூர் /அரியலூர் அரியலூர் மாவட்டத்தில் 3 புதிய புறநகர பேருந்துகள் இயக்கம்

ஜெயங்கொண்டம், அக். 24: தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், போக்குவரத்துத் துறையின் சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலத்தின் மூலம் 3 புதிய புறநகர்ப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பொதுமக்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மாணாக்கர்கள் உள்ளிட்டோர்களுக்கு அரசு பேருந்து சேவை செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் அனைத்து தரப்பு பொதுமக்களும் பயன்பெறும் வகையில் 3 புதிய புறநகரப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.

ஜெயங்கொண்டத்தில் இருந்து பொய்யூர் வழியாக திருச்சி க்கு இரண்டு இடை நில்லா பேருந்துகளையும், மேலும், ஜெயங்கொண்டத்தில் இருந்து திருச்சி, கரூர் வழியாக திருப்பூருக்கு ஒரு புதிய பேருந்தும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் துணை மேலாளர் வணிகம் சாமிநாதன், கோட்ட மேலாளர் இராமநாதன், ஜெயங்கொண்டம் கிளை மேலாளர் ராம்குமார், திமுக சட்ட திட்ட குழு இணைச்செயலாளர் சுபா. சந்திரசேகர், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத்குமார், நகராட்சி ஆணையர் அசோக்குமார், நகர் மன்ற தலைவர் சுமதி சிவக்குமார் துணைத் தலைவர் வெ.கொ. கருணாநிதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் சேகர், கொளஞ்சி, செல்வம், சுப்பிரமணியன் முத்தையன் மற்றும் ஊழியர்கள், திமுக ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் /அரியலூர் அரியலூர் மாவட்டத்தில் 3 புதிய புறநகர பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: