பாத்திர வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

மணப்பாறை, அக்.24: திருச்சி மாவட்டம் மணப்பாறை கரிக்கான் குளத்தைச் சேர்ந்தவர் சேவகன் மகன் ராமநாதன் (55). பாத்திர வியாபாரி. இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் துண்டால் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். அருகில் இருந்தோர் உடனடியாக மணப்பாறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். இன்ஸ்பெக்டர் குணசேகரன் சம்பவ இடத்திற்கு சென்று ராமநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை அறிக்கைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பாத்திர வியாபாரி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: