குடிமனை பட்டா வழங்க கோரி கம்யூனிஸ்ட் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டை, அக். 24: முத்துப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்று இடம் வழங்கக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முத்துப்பேட்டை செக்கடிகுளம், ஓடக்கரை அருகே 30ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து வசதிகளுடன் குடியிருந்த குடும்பங்களின் வீட்டை மாற்று இடம் தருவதாகக்கூறி கடந்த 04.02.2024ந்தேதி இடித்து அகற்றப்பட்டது. ஆனால் 8 ஆண்டுகள் கடந்தும் வழங்கவில்லை.

இதைக் கண்டித்தும் விரைவில் மாற்று இடம் வழங்க கோரியும், வீடு இல்லாதவர்களுக்கு உடனே குடிமனை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் செல்லத்துரை தலைமை வகித்தார். முன்னதாக பட்டுக்கோட்டை சாலை செக்கடிகுளம் அருக்கிலிருந்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் அங்கு நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர் கேவி.ராஜேந்திரன் பேசினர். இதில் நிர;வாகிகள் ஜெயராமன், சரவணன், மணிகண்டன், மந்திரமூர்த்தி, சாந்தி, சேகர் உட்பட நூற்றும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர்.

The post குடிமனை பட்டா வழங்க கோரி கம்யூனிஸ்ட் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: