கரூர்- திண்ணப்பா நகரில் திறந்த நிலையில் உள்ள சாக்கடை வடிகால் சிலாப் மூலம் மூடவேண்டுமென மக்கள் கோரிக்கை

கரூர், அக்.24: கரூர்- திருச்சி சாலை கருப்பக்கவுண்டன் புதூர் பகுதியில் இருந்து திண்ணப்பா நகர் பகுதி செல்கிறது. இந்த நகரில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. மேலும், கருப்பக்கவுண்டன் புதூர், தாந்தோணிமலை, கணபதிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து காந்திகிராமம், இபிகாலனி, திருச்சி சாலை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினர்களும் திண்ணப்பாநகர் வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில், திண்ணப்பா நகரின் நுழைவு பாதையோரம் மிக ஆழமான முறையில் சாக்கடை வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. மூடப்படாத நிலையில் இந்த வடிகால் உள்ளதால் கால்நடைகள் அவ்வப்போது உள்ளே விழுந்து செல்கின்றன. ஆபத்தான நிலையில் வடிகால் திறந்த நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகளும் அச்சத்துடனேயே இந்த பகுதியை கடக்கின்றனர். மேலும், இரவு நேரங்களில் இதனால் அதிகளவு ஆபத்து ஏற்படுகிறது. எனவே, அனைவரின் நலன் கருதி சிலாப் வைத்து வடிகாலை மூட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

The post கரூர்- திண்ணப்பா நகரில் திறந்த நிலையில் உள்ள சாக்கடை வடிகால் சிலாப் மூலம் மூடவேண்டுமென மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: