கோழிப்பண்ணையில் தீ விபத்து

மொடக்குறிச்சி, அக்.24: ஈரோடு மாவட்டம் பாசூர் அருகே உள்ள வேங்கியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தசெல்வன் (62). இவர் பாசூர் அருகே உள்ள பச்சாபாளையத்தில் நார்மில் நடத்தி வருகிறார். இதன் அருகிலேயே பழைய கோழி பண்ணை கொட்டகை உள்ளது. இந்த கோழிப்பண்ணையில் நேற்று முன்தினம் அதிகாலை கருகிய வாசத்துடன் புகை வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தசெல்வன் அங்கு சென்று பார்த்தபோது கோழி பண்ணை கொட்டகை தீயில் எரிந்து சாம்பலானது.உள்ளே நிறுத்தி வைத்திருந்த 4 பைக்குகள் மற்றும் கோழி தீவனம் அரைக்கும் இயந்திரம் ஆகியவைகள் முற்றிலும் சாம்பலானது. இதுகுறித்து ஆனந்த செல்வன் கொடுத்த புகாரின் பேரில் மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோழிப்பண்ணையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: