ஈரோட்டில் காவலர் வீர வணக்க நாள் கலெக்டர், எஸ்பி அஞ்சலி

ஈரோடு, அக்.22: ஈரோட்டில் காவலர் வீர வணக்க நாள் தினத்தையொட்டி, பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எஸ்பி ஜவகர் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நாடு முழுவதும் பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21ம் தேதி காவலர் வீர வணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று வீர வணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது.

இதில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் பணியின் போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எஸ்பி ஜவகர் ஆகியோர் உயிர்நீத்த போலீசாருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஏடிஎஸ்பி.க்கள் விவேகானந்தன், வேலுமணி, டிஎஸ்பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

The post ஈரோட்டில் காவலர் வீர வணக்க நாள் கலெக்டர், எஸ்பி அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: