ரவுடியை சரமாரியாக வெட்டிய சிறுவர்கள்

திருவொற்றியூர்: புதுவண்ணாரப்பேட்டை பல்லவன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் முகேஷ் (26). இவர் மீது காசிமேடு மீன்பிடி துறைமுகம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று முன்தினம் இரவு காசிமேடு இந்து சுடுகாடு அருகே முகேஷ் போதையில் இருந்தபோது, அங்கு வந்த இருவர், இவரிடம் தகராறு செய்து, கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முகேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து புது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுர்கள் 2 பேர் சேர்ந்து முகேஷை வெட்டியது தெரிய வந்தது. முகேஷின் தாயை இந்த 2 சிறுவர்கள் தகாத வார்த்தையில் பேசியுள்ளனர். இதுகுறித்து, முகேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை வாபஸ் பெறக் கூறி 2 சிறுவர்களும் சேர்ந்து, முகேஷை வெட்டியுள்ளனர்.

The post ரவுடியை சரமாரியாக வெட்டிய சிறுவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: