இளைஞரிடம் செல்போன் பறிப்பு

திருக்கழுக்குன்றம்: ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர் சூரியகாந்தன் (23). இவர் திருப்போரூர் அடுத்த கீழக்கோட்டையூர் என்ற இடத்தில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் இவர் வேலை முடிந்து தனது வீட்டிற்கு செல்போனில் பேசியபடியே சென்றுக் கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் சூரியகாந்தன் பேசிக்கொண்டிருந்த விலையுயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். சம்பவம் குறித்து சூரியகாந்தன் தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post இளைஞரிடம் செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: