தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 20 ஆக உயர்ந்துள்ளது. சிவான் மற்றும் சரண் பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற விருந்து நிகழ்வில் கள்ளச்சாராயம் பரிமாறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் கண்பார்வை இழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிகார் அரசானது சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கள்ளச்சாராயம் எங்கு காசப்பட்டது, யாரால் விநியோகம் செய்யப்பட்டது போன்ற விவரங்களை சேகரித்து வருகிறது.
The post பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.