ரூ.5.5 கோடி ஹெராயின் பறிமுதல்

கவுகாத்தி: அசாமின் கவுகாத்தியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் ரோந்து பணியை அதிகரித்தனர். சந்த்மாரி காவல்நிலையத்திற்குட்பட்ட மேம்பாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த இருவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் இருந்த பெட்டியில் ஹெராயின் மறைத்து கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் மதிப்பு ரூ.5.5கோடியாகும்.

The post ரூ.5.5 கோடி ஹெராயின் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: