இதனால் அந்த பகுதியில் பயங்கர வன்முறை வெடித்தது. பஹ்ரைச் மற்றும் பகர்பூர் நகரத்திலும் வேறு சில இடங்களிலும் வன்முறை வெடித்தன. இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசார் அதே பகுதியை சேர்ந்த சல்மான் என்பவரை கைது செய்தனர். மேலும் 30 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இருப்பினும் நேற்றும் இந்த வன்முறை நீடித்தது. சாலைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தடிகள், இருப்பு கம்பிகளுடன் ஊர்வலமாக வந்தனர். போலீசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. போலீசார் எச்சரித்தும் பல கடைகள், வீடுகள், வாகனங்கள் எரிக்கப்பட்டன. அங்கு பதற்றம் நிலவுகிறது.
The post துர்கா சிலை ஊர்வலத்தில் இளைஞர் பலி உபியில் பயங்கர வன்முறை கடை, வாகனங்கள் எரிப்பு appeared first on Dinakaran.