இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி, இது தொடர்பாக கூறியதாவது; முதல் மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் நான் கையெழுத்திட்ட முதல் கையெழுத்து, சிறுநீரக நோயாளிகள் தொடர்பானது. அரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இன்று முதல் இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும். தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம். டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது, அரியானா அரசு அந்த செலவை ஏற்கும் என தெரிவித்தார்.
The post சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை: இன்று முதல் அமல் என அரியானா அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.