அதை தொடர்ந்து வழக்கின் விசாரணை தாம்பரம் காவல் நிலைய போலீசிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், பாஜக நிர்வாகி எஸ். ஆர் சேகர் உள்ளிட்ட 25 பேரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி முடித்துள்ளது. செல்போன் உரையாடல்கள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் புதுச்சேரி பாஜக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான செல்வகணபதி உள்ளிட்ட 3 பேருக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த 3 பெயரில் ஹவாலா ப்ரோக்கர்கள் என்று சிபிசிஐடியால் சந்தேகிக்கப்படும் சௌகார்பேட்டையை சேர்ந்த பங்கஜ், என்.எஸ்.சி பகுதியை சேர்ந்த சூரஜ் ஆகியோரும் அடங்குவர் இந்த 3 பேரும் 26ஆம் தேதி ஆஜராக வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தாம்பரம் அருகே ரூ.4 கோடி பிடிப்பட்ட வழக்கு: புதுச்சேரி பாஜக தலைவர் செல்வ கணபதி எம்.பி.க்கு சிபிசிஐடி சம்மன் appeared first on Dinakaran.