இந்நிலையில், ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், எஸ்.எஸ்.ஏ. ஆசிரியர்களுக்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும்.ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மத்திய கல்வி அமைச்சரிடம் 2 முறை கோரிக்கை வைத்தும், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான நிதி இதுவரையில் வரவில்லை. மாநில அரசு நிதியிலிருந்து நிதியை எவ்வாறு பகிர்ந்து அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
The post எஸ்.எஸ்.ஏ. ஆசிரியர்களுக்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு appeared first on Dinakaran.