கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

மதுராந்தகம்: கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது. மதுராந்தகம் அடுத்த சின்ன கொளம்பாக்கத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியாளர்கள் தினம் கல்லூரி அரங்கில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை தலைமை தாங்கினார். கல்லூரி டீம் சுப்பாராஜ் முன்னிலை வகித்தார். முதல்வர் காசிநாத பாண்டியன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி நிர்வாக இயக்குனர் அண்ணாமலை ரகுபதி வாழ்த்துரை வழங்கினார்.

இதில், சிறப்பு விருந்தினராக எல்.அண்ட்.டி நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் ஜெயசீலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில், மாணவர்களிடையே வினாடி வினா, ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தல், ஆய்வுகள் மாதிரி செய்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் பதக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், துணை தலைவர்கள், ஆசிரியர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

The post கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: